கோவையில் இரத்த வெள்ளத்தில் பட்டதாரி இளைஞர் சடலமாக மீட்பு - தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை….!

கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (29) என்ற பொறியியல் பட்டதாரி, கத்தியால் குத்திய காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாச்சம்பாளையம் பகுதியில் கத்தியால் குத்திய காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்ட நிலையில்தாய் உட்பட 5 பேரிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (29). பொறியியல் பட்டதாரி. போதைக்கு அடிமையான இவர் பணிக்கு செல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றி வந்ததாக தெரிகிறது. தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அடிக்கடி தனது தாய் பாப்பாத்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று மதியம் செந்தில்குமார் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயத்துடன் செந்தில்குமார் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக பாப்பத்தி (தாய்), சீனிவாசன் (மாமா), ராணி (சித்தி) உட்பட 5 உறவினர்களிடம்போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...