தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான பகுதியில் 25 வயது கர்ப்பிணி யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. பிரசவத்தின் போது வலியால் யானை இறந்துள்ளது என்றும் இறந்த குட்டி பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
வால்பாறை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சுற்றியுள்ள சோலையார் அணை, உருளிகல், சின்கோனா, சின்ன கல்லார், பெரிய கல்லார் பகுதிகளில் காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளாகும்.
எஸ்டேட் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வராமல் தடுக்கும் விதமாக, ரோந்து மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்றுதாய்முடி எஸ்டேட் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று கடந்த மூன்று நாட்களாக நடமாடி வருவதை அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான பகுதியில் தாய் யானை மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக,வனத்துறையினருக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது உயிரிழந்துள்ளது தெரியவந்தது.பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அறிவுறுத்தல்படி, துணை கள இயக்குனர், செல்வம் மற்றும்கால்நடை மருத்துவர் விஜயராகவன்மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர்சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை ஆய்வு செய்தனர்.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இறந்த யானைக்குபிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான், யானை இறந்தற்கான சரியான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும் பிரசவத்தின் போது பிரசவ வலியால் இறந்தது தெரியவந்தது. மேலும், இறந்த குட்டி பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
தாய் மற்றும் குட்டி யானைகளை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.
பிரசவத்தின் போது பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்டேட் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு யானைகள் வராமல் தடுக்கும் விதமாக, ரோந்து மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்றுதாய்முடி எஸ்டேட் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று கடந்த மூன்று நாட்களாக நடமாடி வருவதை அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு 7-ம் நம்பர் தேயிலை தோட்டத்தையொட்டி சேறும் சகதியுமான பகுதியில் தாய் யானை மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக,வனத்துறையினருக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது உயிரிழந்துள்ளது தெரியவந்தது.பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அறிவுறுத்தல்படி, துணை கள இயக்குனர், செல்வம் மற்றும்கால்நடை மருத்துவர் விஜயராகவன்மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் ஆகியோர்சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை ஆய்வு செய்தனர்.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இறந்த யானைக்குபிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான், யானை இறந்தற்கான சரியான காரணம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் எனவும் பிரசவத்தின் போது பிரசவ வலியால் இறந்தது தெரியவந்தது. மேலும், இறந்த குட்டி பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
தாய் மற்றும் குட்டி யானைகளை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.
பிரசவத்தின் போது பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.