பல்லடம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது.

பல்லடம் அருகே எம். ஊத்துக்குளி பகுதியில் வீட்டில் தனியே இருந்த திருமணமான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, அதே மாநிலத்தை சேர்ந்த மூவர் வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில், மூவரையும் கைது செய்த மகளிர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம். ஊத்துக்குளி பகுதியில் உள்ள பிரபல டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரிபுல் இஸ்லாம் என்பவர்,வேலை செய்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக, அவர்தனது 21வயது மனைவியுடன் அவர் பணிபுரியும் நிறுவன வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு திரிபுல் இஸ்லாம் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அந்நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவர், அந்த வீட்டுக்குள் புகுந்து தனியே இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அப்பெண் சத்தம் போட்டதால்,அவர்கள் மூவரும்அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து, சக தொழிலாளர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார், அப்பெண்ணை மீட்டு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையும் பரிசோதனையும் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில், வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், வீட்டில் தனியே இருந்த அசாம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த திருமணம் ஆன வெளிமாநில பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...