பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது இளைஞர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி சொக்கனூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 19 வயது கூலித்தொழிலாளி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறிய நிலையில், 4 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 20ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், கர்ப்பமான மாணவி, இதுகுறித்து காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி சிறுமியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையறிந்த, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...