பொள்ளாச்சி சொக்கனூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட 19 வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 19 வயது கூலித்தொழிலாளி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.
நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறிய நிலையில், 4 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 20ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், கர்ப்பமான மாணவி, இதுகுறித்து காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி சிறுமியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையறிந்த, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறிய நிலையில், 4 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 20ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், கர்ப்பமான மாணவி, இதுகுறித்து காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி சிறுமியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையறிந்த, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.