பல்லுயிர்களுக்கு உணவாகவும், சுற்றுச்சூழலை காக்கும் நவதானிய விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்

வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பல்வேறு அளவுகளில் நவதானிய விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு தயாராகி வருகிறது.


கோவை: வரும் 31ஆம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல், மற்றும் நீர்நிலைகளை பாதிக்காத வண்ணம் விநாயகர் சிலைகளை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களால் செய்யப்பட்ட நவதானியங்கள் அடங்கிய விநாயகர் சிலைகள் பல்வேறு அளவுகளில் விற்பனைக்கு தயாராகி வருகிறது.

இது குறித்து பேசிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ரா. மணிகண்டன் கூறுகையில், கடந்த வருடம் நவதானிய விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் உள்ள பல்லுயிர்களுக்கு உணவாகவும், சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அமைந்தது.

எனவே, இவ்வாண்டும் பண்டிகையை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் கொண்டாடும் நோக்கோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நவதானிய விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம், என்றார்.

வீடுகளில் வைக்க சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், அலுவலங்களில் பொது இடங்களில் வைக்க பெரிய அளவிலான சிலைகள் என பல்வேறு அளவுகளில் இந்த சிலைகள் கிடைக்கும்.

அளவுகள்

8 இன்ச் அளவிலான சிலை - ரூ.100க்கு விற்பனை

12 இன்ச் அளவிலான சிலை - ரூ.200க்கு விற்பனை

18 இன்ச் அளவிலான சிலை - ரூ.400க்கு விற்பனை

24 இன்ச் அளவிலான சிலை - ரூ.500க்கு விற்பனை

தொடர்புக்கு: 95667 37318, 98948 26194.

சுந்தராபுரம் – 95667 37318

ராமநாதபுரம் -98421 96822.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...