வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்

வால்பாறையில் நடைபெற்ற இந்த முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை மூலம் நடைபெற்றது.



இதில் வால்பாறை பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மக்களைத்தேடி மருத்துவ தன்னார்வலர்கள் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் வால்பாறை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.



அப்போது பேசிய அவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ள 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் வருடம் 20 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி வந்தால், ரூ.2லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு பெறலாம்.

மேலும், வருடம் 436 ரூபாய் செலுத்தினால் ஆயுள் காப்பீடு பெறலாம். இதேபோல், மாதம் ரூ.5,000 ஓய்வு ஊதியம் பெறும் திட்டமும் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அனைவரும் இந்த திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...