கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் அபராதம் - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு 10 ஆண்டு சிறை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை EC and NDPS கோர்ட் நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.


கோவை: ஈரோடு மாவட்டம் பள்ளபாளையம் அடுத்த சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை (46) வெளியூர்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், அவரை கண்காணித்து வந்த போலீசார், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பூங்கோதையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பூங்கோதையை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கோவை இ.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பான வழக்கு கோவை இ.சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...