கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணிற்கு 10 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் அபராதம் - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிற்கு 10 ஆண்டு சிறை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை EC and NDPS கோர்ட் நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.


கோவை: ஈரோடு மாவட்டம் பள்ளபாளையம் அடுத்த சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை (46) வெளியூர்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், அவரை கண்காணித்து வந்த போலீசார், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பூங்கோதையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பூங்கோதையை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கோவை இ.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பான வழக்கு கோவை இ.சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...