கோவையில் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள்: கோவில், தேவாலயம் மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் அவர் உடல்நலம் பெற வேண்டி, புலியகுளம் விநாயகர் கோவில், அந்தோனியார் தேவாலயம் மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



கோவை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 70வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை மாவட்ட தேமுதிகவினர் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காய்கடை மைதானத்தின் அருகில் உள்ள தேமுதிக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.



இதையடுத்து, அவர் உடல்நலம் பெற புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.



பின்னர், அதே பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து, திருச்சி சாலையில் உள்ள தர்காவில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், கோவை மாநகர தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு, மாநில சட்ட ஆலோசகர், முருகராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர், ராகவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...