கோவையில் ஐடி நிறுவனங்கள் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் - அமைச்சர் மனோ தங்கராஜ்

கோவை தனியார் கல்லூரில் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' இறுதி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்து பேசுகையில், கோவையில் ஐடி நிறுவனங்களை தொடங்க பல்வேறு நிறுவனங்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றார்.



கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” இறுதி போட்டிகள் இன்று துவங்கியது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அணிகளில், 210 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் இப்போட்டியை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் அதிகளவு திறன் மேம்பாடு போட்டிகள் நடத்த தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இ-சேவை பணிகளையும் தீவிர படுத்தியுள்ளோம்.

சாதாரண மக்களுக்கும் எளிய முறையில் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியில்லாதவர்களுக்கு திட்டம் கிடைக்கிறது, அதே போல தகுதியுள்ள மக்களுக்கு திட்டம் செல்வதில்லை என்ற நிலையும் காணமுடிகிறது.



இதற்கு தரவுகள் இல்லாததே முக்கிய காரணம், அதற்காக தான் இ - கவர்னன்ஸ் முறை நடைமுறைப்படுத்த உள்ளோம். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தில் உள்ள மொத்த தரவுகளையும் கொண்டு நிர்வாகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல, தமிழகத்தை திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என்பது தகவல் தொழில் நுட்ப துறையின்முக்கிய குறிக்கோளாகும். புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்களை (Start-up)ஊக்குவிக்க வேண்டும்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐடி துறை பரவலாக்கப்படும். கிராமப்புறங்களிலும் நகரில் உள்ள வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்கிறோம், அதை இலக்காக வைத்து, 1,500 கிராமங்களில் பைபர் இணைய சேவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்டம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. பல்வேறு ஐடி நிறுவனங்கள்,கோவையில் புதிய நிறுவனங்களைதொடங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமேசான் உள்ளிட்ட பல்வேறு புதியநிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டத்திற்கு இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 15 மாதங்களில் 5 முறை முதல்வர் கோவைக்கு மட்டும்வந்துள்ளார்.

கோவையில் உள்ள எல்கார்ட் கட்டிட பணிகள் விரைவில் நிறைவடையஉள்ளது. கல்வி, தொழில்துறை, கட்டமைப்பு வசதிகள் என வளர்ச்சிப் பாதையில் செல்லும் கோவை மாவட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது நமது கடமை.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...