கோவை அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை: கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார்.
இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ரோடு வரை இரு புறங்களிலும் நின்று அதிமுக வின் கொடிகளை ஏந்தியும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியும் வரவேற்பு முழக்கங்களை எழுப்பினர்.
கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்தவாறு சென்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சார வாகனத்தில் பயணித்தார்.