திருப்பூர் அருகே காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை

வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எறிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி போலீசார் அங்கு மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை.



திருப்பூர்: வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.



இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதுகுறித்து வேலம்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், கருகிய நிலையில் இருந்தது ஆண் சடலம் என்றும், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலை செய்தவர் யார், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சமீபத்தில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்லது.



இந்நிலையில் தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.



இதனையடுத்து, தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...