திருப்பூர் அருகே காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை

வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எறிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி போலீசார் அங்கு மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை.



திருப்பூர்: வேலம்பாளையம் அடுத்த பொங்குபாளையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.



இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதுகுறித்து வேலம்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், கருகிய நிலையில் இருந்தது ஆண் சடலம் என்றும், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், கொலை செய்தவர் யார், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சமீபத்தில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்லது.



இந்நிலையில் தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.



இதனையடுத்து, தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...