கோவைப்புதூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான இளைஞரை பிடிக்க தனிப்படை தீவிரம்.

கோவைப்புதூர் அருகே கட்டிட வேலை செய்யும் தாயுடன் தங்கி இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 27 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை புதூர் அருகே தனியார் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இந்த கட்டிட பணிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தகட்டிட தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே அங்கு பெண் ஒருவர் தனது 6 வயது பெண் குழந்தையுடன் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில், உடன் பணியாற்றும் 27வயது இளைஞர் ஒருவர், அந்த6 வயது சிறுமியுடன்பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது அங்கு வந்த அந்த இளைஞர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தெய்வமணி, தலைமறைவான கட்டிட தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக, தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...