தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த சேரன் நகர் பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள்களை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்றுபெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தலைமையில் காவலர்கள்பாலசுப்பிரமணி, முத்தமிழரசன், வீரமணி ஆகியோர்களுடன் மத்தம்பாளையம் சாலை தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சேரன் நகரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து,அப்பாஸை கைது செய்து போலீசார் காரில் இருந்த ஹான்ஸ், கூல் லிப், விமல் பான் மசாலா, வி1 மசாலா எனமொத்தம் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 2.265 டன் புகையிலை பொருட்கள், நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த அப்பாஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரிய கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து சமூக சீர்கேடு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோரை எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.
அதன் அடிப்படையில் நேற்றுபெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தலைமையில் காவலர்கள்பாலசுப்பிரமணி, முத்தமிழரசன், வீரமணி ஆகியோர்களுடன் மத்தம்பாளையம் சாலை தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சேரன் நகரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து,அப்பாஸை கைது செய்து போலீசார் காரில் இருந்த ஹான்ஸ், கூல் லிப், விமல் பான் மசாலா, வி1 மசாலா எனமொத்தம் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 2.265 டன் புகையிலை பொருட்கள், நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த அப்பாஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரிய கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து சமூக சீர்கேடு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோரை எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.