அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர் - எதையாவது பேச வேண்டும் என பேசுகிறார் - கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்

அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர். ஊடங்களிடம் எதையாவது பேச வேண்டும் என பேசுகிறார். அவர் குறித்த கேள்விகளை கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும், என அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.


கோவை: கோவை பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி பகுதியில் வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத நபர் என்றும், நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை எனவே அவர் பற்றிய கேள்விகள் கேட்பதை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம், என கூறினார்.

மேலும் ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலை முதலில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம், என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...