முதல்வரின் வருகை தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வருகையை ஒட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வரும் 24 முதல் 26 ஆம் தேதி வரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை இரவு கோவை வருகிறார்.
இந்நிலையில், முதல்வரின் வருகை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வர் பயனாளிகளுக்கு அளிக்க உள்ள நலதிட்ட உதவிகள், பொதுமக்கள் முதல்வரிடத்தில் அளிக்க உள்ள மனு, காவல் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாவட்ட வருவாய் ஆய்வாளர் லீலா அலெக்ஸ், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.