வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கோவை: கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர், இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடவள்ளி காவல் நிலையம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன், ஜெகந்நாதன்தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்ததால், காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்த காவலர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்கஅழைத்துச் சென்றனர்.
குறை தீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகத்தில், நீதி வேண்டி மற்றும் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிபெருக்கியில்தன் பிரச்சனையை கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதர்ணாவில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.
இது குறித்து, பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடவள்ளி காவல் நிலையம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன், ஜெகந்நாதன்தர்ணாவில் ஈடுபட்டார்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்ததால், காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்த காவலர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்கஅழைத்துச் சென்றனர்.
குறை தீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகத்தில், நீதி வேண்டி மற்றும் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிபெருக்கியில்தன் பிரச்சனையை கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதர்ணாவில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.