புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.
கோவை: ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி சில்லரை விற்பனை செய்வது, வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்ப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க போதை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி மண்ணீஸ்வரன் முடி வனப்பகுதியில் 900 அடி உயரத்தில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக பயிர் செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அட்டப்பாடி வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறையினர் வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறுக்கத்திக்கல் என்ற இடத்தில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சோதனைக்கு சென்ற கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.

இதையடுத்து, அருகே உள்ள வனப்பகுதிகளிலும் கஞ்சா செடிகள் ஏதேனும் பயிரிடப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி மண்ணீஸ்வரன் முடி வனப்பகுதியில் 900 அடி உயரத்தில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக பயிர் செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அட்டப்பாடி வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறையினர் வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறுக்கத்திக்கல் என்ற இடத்தில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சோதனைக்கு சென்ற கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.
இதையடுத்து, அருகே உள்ள வனப்பகுதிகளிலும் கஞ்சா செடிகள் ஏதேனும் பயிரிடப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.