அட்டப்பாடி வனப்பகுதியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு - கேரள வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறை நடவடிக்கை…!

புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.


கோவை: ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி சில்லரை விற்பனை செய்வது, வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்ப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க போதை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி மண்ணீஸ்வரன் முடி வனப்பகுதியில் 900 அடி உயரத்தில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக பயிர் செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அட்டப்பாடி வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறையினர் வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறுக்கத்திக்கல் என்ற இடத்தில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, சோதனைக்கு சென்ற கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.



இதையடுத்து, அருகே உள்ள வனப்பகுதிகளிலும் கஞ்சா செடிகள் ஏதேனும் பயிரிடப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...