தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை நெகமம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.11.64 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், 6 இரண்டு சக்கர வாகனம், தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டன.
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மொட்டபாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.11.64 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், 6 இரண்டு சக்கர வாகனம், 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மற்றும் இரண்டு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 17 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மொட்டபாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.11.64 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், 6 இரண்டு சக்கர வாகனம், 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மற்றும் இரண்டு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 17 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.