கோவையில் அரசு பேருந்து ஓட்டுநரை வெட்டிய போதை நபர் கைது….!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில், போதையில் ரகளையில் ஈடுபட்டு, அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரியபுத்தூர் வழியாக 1C, 25 நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் ஓட்டுநராக மூடுதுறை மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலக்குமார் (41) என்பவரும், நடத்துநராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல், மேட்டுப்பாளையத்தில் இருந்து பேருந்து அன்னூருக்கு புறப்பட்டது. அப்போது, பேருந்து வெளியே வரும் வழியில் சாலையின் நடுவே போதையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி கீழே இறங்க கோரி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அந்த நபரை ஓட்டுநர் அருணாச்சலகுமார் கீழே இறங்கிவிட்டு ஓரமாக செல்ல வலியுறுத்தியுள்ளார். அப்போது, தீடீரென அந்த போதை நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் அருணாச்சலகுமாரின் கை மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அருணாச்சல குமார் படுகாயம் அடைந்துள்ளார்.



அவரை சக ஊழியர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அரசு பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் மணிகண்டன் (40) என்பதும் அவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் காசு வாங்கி மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, போதுமான காவலர்களை நியமித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகள் மற்றும் பெண்கள் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...