திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்புடைய முக்கிய ஆதாரமான கடத்தல் வாகனம், மாருதி சுசூகி வெர்சா வாகன உரிமையாளர்களிடம் என கோவையில் 250 பேரிடம் விசாரணை.
கோவை: திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமானகே.என். ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம்நடைப்பயிற்சிக்கு செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலில் இவ்வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்தனர். இதன் பின்னர்,வழக்கு வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடிடிஜிபி ஷக்கில் அக்தர்தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குகுவினர்,இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமான மாருதி சுசுகி வர்ஷா கார் பற்றி தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும்இதுவரை1400 மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வெர்சாவாகன உரிமையாளர்களிடம் இன்று சிபிசிஐடி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை முகாமில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்தவிசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலில் இவ்வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்தனர். இதன் பின்னர்,வழக்கு வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடிடிஜிபி ஷக்கில் அக்தர்தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குகுவினர்,இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமான மாருதி சுசுகி வர்ஷா கார் பற்றி தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும்இதுவரை1400 மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வெர்சாவாகன உரிமையாளர்களிடம் இன்று சிபிசிஐடி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை முகாமில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்தவிசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.