கோவையில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு….!

பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த காமாட்சி சுந்தரம் என்பவர் கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி சுந்தரம்.



இவர் பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி வழக்கம் போல காவலர் காமாட்சி சுந்தரம் பணிக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். அப்போது, தாமரைக்குளம் அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் காமாட்சி சுந்தரத்தின் வாகனம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, காமாட்சி சுந்தரம் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...