சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வேலுச்சாமிக்கு (22) 6 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வேலுச்சாமி (22) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வேலுச்சாமிக்கு (22) 6 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை, சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட, அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண்காவலர் நிவேதா ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.
இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வேலுச்சாமிக்கு (22) 6 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை, சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட, அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண்காவலர் நிவேதா ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.