183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
கோவை: உலகம் முழுவதும் புகைப்பட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியானது மத்திய பேருந்து நிலையம், மாரக்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அரசு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசின் நல திட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகைப்பட கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறோம் ஆனால் அரசின் எந்த சலுகைகளும் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
தேர்தல் காலங்களில் ஒளிப்பதிவு ஒப்பந்தங்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர்கள், நேரடியாக புகைப்பட கலைஞர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி நல வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியானது மத்திய பேருந்து நிலையம், மாரக்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அரசு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசின் நல திட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகைப்பட கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறோம் ஆனால் அரசின் எந்த சலுகைகளும் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
தேர்தல் காலங்களில் ஒளிப்பதிவு ஒப்பந்தங்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர்கள், நேரடியாக புகைப்பட கலைஞர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி நல வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.