உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி

183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


கோவை: உலகம் முழுவதும் புகைப்பட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.



நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியானது மத்திய பேருந்து நிலையம், மாரக்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இதனை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அரசு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



இதனையடுத்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசின் நல திட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகைப்பட கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறோம் ஆனால் அரசின் எந்த சலுகைகளும் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் ஒளிப்பதிவு ஒப்பந்தங்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர்கள், நேரடியாக புகைப்பட கலைஞர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி நல வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...