ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவை பந்தய சாலையில் நடைபெறும் பணிகளை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பந்தய சாலை பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வின்போது அறிவுறுத்தினர்.



கோவை: பந்தய சாலை பகுதியில் 40.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த வளர்ச்சி திட்ட பணிகளை இன்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின் போது, பந்தய சாலை பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல், முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வில், போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து உதவி ஆணையர் சரவணன், மத்திய மண்டல ஆணையர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...