பந்தய சாலை பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வின்போது அறிவுறுத்தினர்.
கோவை: பந்தய சாலை பகுதியில் 40.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வளர்ச்சி திட்ட பணிகளை இன்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, பந்தய சாலை பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல், முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வில், போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து உதவி ஆணையர் சரவணன், மத்திய மண்டல ஆணையர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.