கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்காக கஞ்சா விற்பனை செய்த 5 கல்லூரி மாணவர்கள் கைது.

நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டே நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 5 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், திருப்பூர் காந்திநகர் 2வது தெருவை சேர்ந்த சூர்யா (21), பிச்சம்பாளையம் புதூரை சேர்ந்த கவியரசு (19), மனோஜ்குமார் (19), இளையபாரதி (19) மற்றும் அவிநாசி காசி கவுண்டன்புதூரை சேர்ந்த அரவிந்த் (19) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் அனைவரும் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், வெளியே அறை எடுத்து தங்கியிருந்து நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...