திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரான தேவராஜன் தலைமையில், திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்திற்கு வரும் 26ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 4 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் பரமசிவம்: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனை மீறியும் செயல்படுத்த நினைத்தால் கண்டிப்பாக திட்டத்தை நிறைவேற்ற பாசன சபை தலைவர்கள், உறுப்பினர்கள் விடமாட்டோம் என்றும், எந்தவிதமான போராட்டத்தை வேண்டுமானாலும் கையில் எடுக்க தயங்க மாட்டோம்.
கால்வாய்களை சீரமைக்க ரூ.7 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வராத பட்சத்தில் பராமரிப்பு நிதியை கொண்டு முடிந்த அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.
கால்வாய் சீரமைப்பிற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் பாசன சபை சங்க கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி உதவி பொறியாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இதேபோல், காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.
நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்திற்கு வரும் 26ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 4 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் பரமசிவம்: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனை மீறியும் செயல்படுத்த நினைத்தால் கண்டிப்பாக திட்டத்தை நிறைவேற்ற பாசன சபை தலைவர்கள், உறுப்பினர்கள் விடமாட்டோம் என்றும், எந்தவிதமான போராட்டத்தை வேண்டுமானாலும் கையில் எடுக்க தயங்க மாட்டோம்.
கால்வாய்களை சீரமைக்க ரூ.7 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வராத பட்சத்தில் பராமரிப்பு நிதியை கொண்டு முடிந்த அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.
கால்வாய் சீரமைப்பிற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் பாசன சபை சங்க கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி உதவி பொறியாளர்கள் கலந்துகொள்வார்கள்.
இதேபோல், காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.