வரும் 26ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடிவு

திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரான தேவராஜன் தலைமையில், திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்திற்கு வரும் 26ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 4 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் பரமசிவம்: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனை மீறியும் செயல்படுத்த நினைத்தால் கண்டிப்பாக திட்டத்தை நிறைவேற்ற பாசன சபை தலைவர்கள், உறுப்பினர்கள் விடமாட்டோம் என்றும், எந்தவிதமான போராட்டத்தை வேண்டுமானாலும் கையில் எடுக்க தயங்க மாட்டோம்.

கால்வாய்களை சீரமைக்க ரூ.7 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வராத பட்சத்தில் பராமரிப்பு நிதியை கொண்டு முடிந்த அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

கால்வாய் சீரமைப்பிற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் பாசன சபை சங்க கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி உதவி பொறியாளர்கள் கலந்துகொள்வார்கள்.

இதேபோல், காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...