கோவையில் பால வேலைகள் மட்டுமே நடைபெறுகிறது. சாலை சீரமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உட்பட 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



போராட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மாநகரம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட வைப்புத் தொகை கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்பால வேலைகள் மட்டுமே நடப்பதாகவும், மற்றபடி மாநகரம் முழுவதும் எந்த சாலைகளும் சீரமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு மழைக்கு பின் கோவையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கையில், இந்த சொத்துவரி பெரும் சுமையை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...