புதைவட மின்சார கேபிள் அமைக்கும் பணிகள் நிறைவு - பரிசோதனை காரணமாக உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கக்கூடும்.

மின் கம்பிகளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் மின் விநியோகம் அவ்வப்போது நிறுத்தப்படும் என கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.



கோவை: உக்கடம் அருகேயுள்ள ஆத்துப்பாலம் சாலையில்450 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்கே செல்வதால் மேம்பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது, உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு அதில், உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.

புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக, பெரிய மின் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்து.

தற்போது, புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக, கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

உக்கடம் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவட மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து, மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், உக்கடம்மற்றும் கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் சில நேரங்களில்மின்விநியோகம் நிறுத்தப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...