மின் கம்பிகளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், உக்கடம், கரும்புக்கடை பகுதிகளில் மின் விநியோகம் அவ்வப்போது நிறுத்தப்படும் என கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
கோவை: உக்கடம் அருகேயுள்ள ஆத்துப்பாலம் சாலையில்450 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்கே செல்வதால் மேம்பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது, உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு அதில், உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.
புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக, பெரிய மின் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்து.
தற்போது, புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக, கோவை மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
உக்கடம் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவட மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து, மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், உக்கடம்மற்றும் கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் சில நேரங்களில்மின்விநியோகம் நிறுத்தப்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.