கோவையில் நகை கடையில் போலி நகையை வைத்துவிட்டு ஒரிஜினல் நகையை திருடிச் சென்ற தாய், மகள் கைது

கடந்த ஜனவரி 26-ம் தேதி, கோவையில் உள்ள தங்கநகை கடையில் பர்தா அணிந்து வந்து இரு பெண்கள், போலி நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகையை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், விசாரணை நடத்தி வந்த போலீசார் 7 மாதங்களுக்கு பிறகு இருவரையும் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை பெரிய கடை வீதியில், சிவகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி, இந்த நகைக்கடைக்கு பர்தா அணிந்தபடி வந்த இரு பெண்கள், நகைகளை வாங்குவதற்காக வந்துள்ளதாக தெரிவித்து, நகைகளை பார்த்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து, இருவரும் பின்னர் வந்து நகைகளை வாங்க வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள், சென்ற பின்னர் நகையை சோதித்த போது, அவை எடை குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், போலி கவரிங் நகை என்பதும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் சிவகுமார், அந்த பெண்களை கடைவீதி முழுதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், நகைகளை கொள்ளையடித்த இரு பெண்களையும் .வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கடந்த ஜனவரி மாதம், சிவகுமாரின் நகைக்கடையில் நூதன திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட சுமதி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தாய், மகள் என்பதும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இவர்கள் இருவருக்கும் வேறு எதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...