கோவையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர் வன்முறையில் ஈடுபடுவதாக திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் காவல் ஆணையரிடம் மனு

காவல் ஆணையாளர் அலுவகத்தில் அளித்த புகார் மனுவில், பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வரின் புகைப்படத்தை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.



கோவை: பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் சமீப காலங்களாக பாஜக மற்றும் அதன் சார்பு இந்து இயக்கங்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வரின் புகைப்படத்தை காவல்துறை முன்னிலையில் பாஜகவினர் கிழித்து அரஜாகத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த செயல்பாட்டினால், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறதா என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பாக, தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...