கிருஷ்ண ஜெயந்தி: பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக த.பெ.தி.க வினர் மனு

மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று த.பெ.தி.க வினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர் ஒருவர் பெற்றோர்களிடம் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ இன்று காலை முதல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து, இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சாஜித், அனைத்து மதத்தினரும் படிக்கும், மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் கொடுக்கும் இது போன்ற அழுத்தங்களால் பெற்றோர்களுக்கு பொருளாதார பாரத்தையும் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக அவர் கூறியதாக, தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...