கிருஷ்ண ஜெயந்தி: பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக த.பெ.தி.க வினர் மனு

மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று த.பெ.தி.க வினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர் ஒருவர் பெற்றோர்களிடம் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ இன்று காலை முதல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து, இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சாஜித், அனைத்து மதத்தினரும் படிக்கும், மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் கொடுக்கும் இது போன்ற அழுத்தங்களால் பெற்றோர்களுக்கு பொருளாதார பாரத்தையும் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக அவர் கூறியதாக, தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...