பெ.நா.பாளையம் மேம்பால பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

பெ.நா.பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை துரிதப்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி அணுகு சாலை அமைக்க தேவைப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்திட வேண்டும், என்றார்.

மேலும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பெரியநாயக்கன்பாளையம் பாலம் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...