பெ.நா.பாளையம் மேம்பால பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

பெ.நா.பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை துரிதப்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி அணுகு சாலை அமைக்க தேவைப்படும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்திட வேண்டும், என்றார்.

மேலும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பெரியநாயக்கன்பாளையம் பாலம் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...