சென்னையில் இருந்து கோவைக்கு இன்று மதியம் 2:30 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது. இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.
கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே ரயில்வே மின் ஒயர் அறுந்து சென்னையில் இருந்து கோவை கிளம்பிய இன்டர்சிட்டி ரயில் மீது விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயில் காலை 6.30 மணிக்கும், சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.30 மணிக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கம் போல, சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி கிளம்பியது.
அப்போது, ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது.
இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.
மேலும், ரயில்வே ஒயர் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட பிற ரயில்களும் சேவூர் அருகே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்த கம்பிகளை நீண்ட நேரத்துக்கு பின் பொருத்தினார். இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கு பின் மீண்டும் இன்டர்சிட்டி ரயில், சேவூரில் இருந்து கோவைக்கு கிளம்பியது.
இந்த சம்பவத்தால், இன்டர்சிட்டி மற்றும் பிற இரயில் சேவைகளும் தடைப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.தீடீரென, மின் கம்பி அறுந்தது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.