சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில் மீது ரயில்வே மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை 5 மணி நேரம் பாதிப்பு…!

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று மதியம் 2:30 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது. இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.



கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே ரயில்வே மின் ஒயர் அறுந்து சென்னையில் இருந்து கோவை கிளம்பிய இன்டர்சிட்டி ரயில் மீது விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயில் காலை 6.30 மணிக்கும், சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.30 மணிக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கம் போல, சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி கிளம்பியது.



அப்போது, ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது.



இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.



மேலும், ரயில்வே ஒயர் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட பிற ரயில்களும் சேவூர் அருகே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்த கம்பிகளை நீண்ட நேரத்துக்கு பின் பொருத்தினார். இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கு பின் மீண்டும் இன்டர்சிட்டி ரயில், சேவூரில் இருந்து கோவைக்கு கிளம்பியது.

இந்த சம்பவத்தால், இன்டர்சிட்டி மற்றும் பிற இரயில் சேவைகளும் தடைப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.தீடீரென, மின் கம்பி அறுந்தது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...