கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி, கோவை வேளாண் பல்கலை., விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவனின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் வேளாண் பல்கலைகழக மாணவன் பிரோதாஸ் குமார் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது



கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயோ டெக் முதலாமாண்டு படித்து வந்த மாணவன் பிரோதாஸ் குமார் (19), கடந்த 19 ஆம் தேதி ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவனின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டு இருப்பதன் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் பழனி என்பவரது மகன் தான் பிரோதாஸ் குமார் (19). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இளங்கலை வனவியல் (Bsc. Forestry) பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த மாணவர் பிரோதாஸ் குமார், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் துறையில் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் மாணவன், கல்லூரியின் ஹாஸ்டல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து, ஆர்.எஸ். புரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால், மாணவன் கடும் மன உலைச்சலில் இருந்ததாகவும் அவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. 

தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக திருவண்ணாமலையில் மாணவன் வீட்டில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

எதிர்பார்த்த படிப்பை படிக்க முடியவில்லை என்ற விரக்தியில், மாணவன் கடந்த மே மாதம் வேளாண் பல்கலைக்கழகத்தின் விடுதியில் அரளிச் செடியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து, மாணவர் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...