கடந்த 30 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை - கோவையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு - அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் மைல்கல் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு (கோவைபுதூர் திட்டபகுதி) அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



அப்பகுதிகளில் கடந்த 30 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், இன்று மைல்கல் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து பேசிய பொதுமக்கள், குடிசை மாற்று வாரியம் சார்பில் குனியமுத்தூர், ஆத்துப்பாலம், சுண்ணாம்பு காலவாய், குறிச்சி பிரிவில் இருந்து கடந்த ஒன்றரை வருடம் முன்பு குடிமற்றம் செய்யபட்டவர்களுக்கு கடந்த ஒரு வருடமாகவே குடிநீர் சரிவர வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.



முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 150 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக குடிநீர் விநியோகித்து தினசரி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.



பின்னர், போராட்டதை கைவிட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...