இன்று கிட்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, குறைகளையும் கேட்டறிந்தார்.
கோவை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவு, அதன்படி, இன்று சூலூர் அருகேயுள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சியில் 01.04.2022 முதல் 31.07.2022 முடியவுள்ள காலத்தில் செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்கள் படித்துக் காண்பித்து ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர் வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, வீடு வழங்கும் திட்டம் 2010 மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

இந்த கிராம சபை கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டு புதிதாக போடப்பட்ட தீர்மானங்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த தீர்மானங்களுடன் சிறப்பு தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளது என்றும், இந்த தீர்மானங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர், குளத்துப்பாளையத்தை பொருத்தமட்டில், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், குளத்துப்பாளையம் கிராமத்தில் அனைவரும் வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சமீரன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சந்திரசேகர், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சியில் 01.04.2022 முதல் 31.07.2022 முடியவுள்ள காலத்தில் செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்கள் படித்துக் காண்பித்து ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர் வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, வீடு வழங்கும் திட்டம் 2010 மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
இந்த கிராம சபை கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டு புதிதாக போடப்பட்ட தீர்மானங்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த தீர்மானங்களுடன் சிறப்பு தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளது என்றும், இந்த தீர்மானங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், குளத்துப்பாளையத்தை பொருத்தமட்டில், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், குளத்துப்பாளையம் கிராமத்தில் அனைவரும் வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சமீரன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சந்திரசேகர், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.