கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தையின் நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவையில் 10 வயது சிறுமிக்கு ஒராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையின் நண்பரை, பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: ஆலந்துறை அருகே பெண் ஒருவர் தனது 12 வயது மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி வீட்டில் அழுது கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் நண்பர் தனக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும். இதை வெளியில் சொல்லக் கூடாது என அவர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், சைல்டு லைன் அழைத்து பேசியுள்ளனர். சைல்டு லைன் அமைப்பின் வழிகாட்டுதலின் படி, சிறுமியின் பெற்றோர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...