கோவையில் 10 வயது சிறுமிக்கு ஒராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையின் நண்பரை, பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: ஆலந்துறை அருகே பெண் ஒருவர் தனது 12 வயது மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி வீட்டில் அழுது கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் நண்பர் தனக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும். இதை வெளியில் சொல்லக் கூடாது என அவர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், சைல்டு லைன் அழைத்து பேசியுள்ளனர். சைல்டு லைன் அமைப்பின் வழிகாட்டுதலின் படி, சிறுமியின் பெற்றோர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமி வீட்டில் அழுது கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் நண்பர் தனக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும். இதை வெளியில் சொல்லக் கூடாது என அவர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், சைல்டு லைன் அழைத்து பேசியுள்ளனர். சைல்டு லைன் அமைப்பின் வழிகாட்டுதலின் படி, சிறுமியின் பெற்றோர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.