திருப்பூரில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியை வழிமறித்து மனு கொடுக்க முயன்ற பெண்ணால் - பரபரப்பு

விழாவின் போது, ஒரு பெண், மாவட்ட ஆட்சியரை திடீரென வழிமறித்து, கணவரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அரசு உதவிகளை வழங்க கோரி மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: இன்று திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரை திடீரென வழிமறித்து மனு அளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியில் உள்ள சிக்கண்ணா அலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



தேசிய கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் வினீத், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள வாகனத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தார்.



அப்போது கணவனை இழந்த ஒரு பெண், கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தனது கோரிக்கையை கூற முயன்றார்.



அப்போது அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர்.



இதனையடுத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை அழைத்து அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.



அப்போது அந்த பெண் தனது பெயர் ஷாலினி என்றும், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அருகில் வசித்து வருவதாகவும் கூறினார். சமீபத்தில் தனது கணவரை இறந்து விட்டதாகவும், கணவன் இறந்த பின்பு, கணவரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஒரு அரசு உதவியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தயவு கூர்ந்து தனக்கு அரசு உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.



பெண்ணின் கோரிக்கையை கேட்ட மாவட்ட ஆட்சியர் வினீத், உரிய அதிகாரியிடம் நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

இச்சம்பவத்தால், சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...