திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சிக்கண்ணா அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி,சிக்கண்ணா அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் வினீத்தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.



பின்னர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊர்காவல்படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அரசின் சார்பில் வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை உட்பட அரசு துறைகள் சார்பாக229 பயனாளிகளுக்கு 1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதேபோல, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.



முன்னதாக, சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் கௌரவித்தார்.

இதனையடுத்து, பள்ளிமாணவ - மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, அமைதியை வலியுறுத்தும் வகையில் வானில் வெண் புறாக்கள் மற்றும் கலர் பலூன்கள் பறக்க விடப்பட்டன.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...