கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியை ஆட்சியர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 13ஆம் தேதியான இன்று முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.