75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியில் இருக்கும் 3 வண்ணங்களை கொண்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களிலும் சுதந்திர தினத்திற்கு முன்னிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகங்களிலும், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை போல் மின் விளக்குகளால் அங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றது.

இதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை சுற்றிலும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை போல் மின் விளக்குகளால் அங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றது.
இதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை சுற்றிலும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.