கோவையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் TAMCO முகாமில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்..!

சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கான விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் நடைபெற்றது.


கோவை: சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக நடைபெற்ற முகாமில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் அடைந்தனர்.



சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக (11/08/22) வியாழன்று சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் 95-வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.A காதர் தலைமையில், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் G.M. ரபீக் முன்னிலையில் நடைபெற்றது.



சிறப்பு விருந்தினராக சிறுபான்மை நல பிரிவு துணை ஆட்சியாளர் ரமண கோபால், சூப்பிரண்டு சேகர், CCB AGM மீனாம்பிகை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண் உரிமை, தொழில் வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இம்முகாமில் 100-பெண்களுக்கு 8-மகளிர் குழு ஆரம்பிக்கப்பட்டு 180-பேருக்கு தனிநபர் கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சை அளித்து இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இம்முகாமில் பயன் அடைந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...