பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி : இரு மாநில எல்லைகளுக்கு சீல்!


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு கட்சியினர் கேரள எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தமிழக-கேரள எல்லை பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் குறுக்கேதேக்குவட்டை, மஞ்சக்கண்டிஉள்ளிட்ட 6 இடங்களில் கேரளஅரசு தடுப்பணைகள் கட்டும்பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமானபணிகள் நடைபெறுவதை தடுத்தநிறுத்த வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாகபவானி ஆற்றில் தடுப்பணைகள்கட்டும் கேரள அரசை கண்டித்தும்,கட்டுமான பணிகளை மத்திய அரசுதடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்டம் ஆணைக்கட்டியில்அனைத்து கட்சிகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, தபெதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 



இதையடுத்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பகுதிகளுக்கு சென்று, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்து கட்சியினர் சென்றனர். கேரள மாநிலத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால், அம்மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைகளில் தண்ணீர் பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் கேரள மாநிலத்திற்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...