விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று, அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3-டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை: கேரளா கடத்த முயன்ற 3-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த நபரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியை பொதுமக்களிடம் மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்களிடம் வாங்கிய ரேசன் அரிசியை நள்ளிரவு நேரத்தில் கேரளாவுக்கு கடத்த உள்ளதாகவும், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
மேலும் 75 கிலோ மூட்டைகளாக சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மார்டின் (42) என்பதும், கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மார்டினை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாகன உரிமையாளர் நிஜாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியை பொதுமக்களிடம் மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்களிடம் வாங்கிய ரேசன் அரிசியை நள்ளிரவு நேரத்தில் கேரளாவுக்கு கடத்த உள்ளதாகவும், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
மேலும் 75 கிலோ மூட்டைகளாக சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மார்டின் (42) என்பதும், கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மார்டினை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாகன உரிமையாளர் நிஜாம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.