#Breaking: கோவை நொய்யல் ஆற்றில் மாயமான மூதாட்டியை தேடும் பணி தீவிரம்..!

கோவை நொய்யல் ஆற்றில் துணி துவைக்க சென்று மாயமான மூதாட்டியை தேடும் பணியில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.



கோவை: கோவை நொய்யல் ஆற்றில் மாயமான மூதாட்டியை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி உடலைத் தேடி வருகின்றனர்.



கோவை சித்திரை சாவடி அணையில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி வீடு திரும்பாததால் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை ஆலந்துறை அடுத்த சீனிவாசபுரம் கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ன கமலம்மாள் (60). சித்திரைச்சாவடி அணைக்கு துணி துவைக்கச் சென்றதாகத் தெரிகிறது.

நீண்ட நேரம் ஆகியும் வராததால் உறவினர்கள் அந்த பகுதிக்குச் சென்று பார்க்கும் போது அவருடைய செருப்பு மற்றும் துண்டு அணை பகுதியில் இருந்ததால் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...