#Breaking: கோவை நொய்யல் ஆற்றில் மாயமான மூதாட்டியை தேடும் பணி தீவிரம்..!

கோவை நொய்யல் ஆற்றில் துணி துவைக்க சென்று மாயமான மூதாட்டியை தேடும் பணியில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.



கோவை: கோவை நொய்யல் ஆற்றில் மாயமான மூதாட்டியை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி உடலைத் தேடி வருகின்றனர்.



கோவை சித்திரை சாவடி அணையில் துணி துவைக்கச் சென்ற மூதாட்டி வீடு திரும்பாததால் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை ஆலந்துறை அடுத்த சீனிவாசபுரம் கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ன கமலம்மாள் (60). சித்திரைச்சாவடி அணைக்கு துணி துவைக்கச் சென்றதாகத் தெரிகிறது.

நீண்ட நேரம் ஆகியும் வராததால் உறவினர்கள் அந்த பகுதிக்குச் சென்று பார்க்கும் போது அவருடைய செருப்பு மற்றும் துண்டு அணை பகுதியில் இருந்ததால் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை தேடி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...