கோவை நகை பட்டறையில் பணியாற்றி வந்த வட மாநிலத்தை சேர்ந்த எட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…!

கோவை சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில், பணிக்கு வைத்திருந்த எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து, அந்த 8 வட மாநில குழந்தைகளும் பத்திரமாக குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு

மேற்கொண்டனர்.

அதன்படி, சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டதில், எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 வட மாநில குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அனைவரும் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இதனிடையே, சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் இருவர் மீதும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் துறையின் மூலம் நீதிமன்றத்தில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...