கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்து..!

விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.



கோவை: கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாயில் ஆய்வு மேற்கொண்ட போது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 8 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. குறிச்சி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், அவினாசி சாலை, காளப்பட்டி, தண்ணீர் பந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகிறது.



அப்போது விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது.



இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...