விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.
கோவை: கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாயில் ஆய்வு மேற்கொண்ட போது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் 8 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. குறிச்சி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அவினாசி சாலை, காளப்பட்டி, தண்ணீர் பந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகிறது.
அப்போது விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.