மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை: கோவையில் பேட்டரிக்கு ஊற்றும் தண்ணீரை குடித்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை - திருச்சி ரோட்டில் பந்தைய சாலை காவலர் ஶ்ரீதர் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பார்த்த அவர், அருகே சென்று மூதாட்டியை சோதித்த போது, அங்கு தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது.
அதை பார்த்த போது லாரி உள்ளிட்ட பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் “டிஸ்டல் வாட்டர்” என்பது தெரியவந்தது. குடிநீர் என நினைத்து பேட்டரிகளுக்கு ஊற்றும் தண்ணீரை தவறுதலாகக் குடித்ததால் மயங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து,மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் ஶ்ரீதர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன்அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலையில் அனைவரும் கடந்து சென்ற நிலையில், மூதாட்டியிடம் சென்று நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை - திருச்சி ரோட்டில் பந்தைய சாலை காவலர் ஶ்ரீதர் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பார்த்த அவர், அருகே சென்று மூதாட்டியை சோதித்த போது, அங்கு தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது.
அதை பார்த்த போது லாரி உள்ளிட்ட பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் “டிஸ்டல் வாட்டர்” என்பது தெரியவந்தது. குடிநீர் என நினைத்து பேட்டரிகளுக்கு ஊற்றும் தண்ணீரை தவறுதலாகக் குடித்ததால் மயங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து,மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் ஶ்ரீதர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன்அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலையில் அனைவரும் கடந்து சென்ற நிலையில், மூதாட்டியிடம் சென்று நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.