கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளை மற்றும் நில உரிமையாளர்களுக்கு ரூ 373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துரை..!

கோவை மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்கு சட்ட விரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பரிந்துரைத்துள்ளார்.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நில உரிமையாளர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்ன தடாகம், சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய கிராமங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து செங்கல் சூளைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டுள்ள மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார்.



இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நில உரிமையாளர்களுக்கும், செங்கல் சூளை நிறுவனங்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளிலும் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டுள்ள மண் தொடர்பாக கனிம வளத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செங்கல் செய்வதற்காகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண் தரத்தை ஆய்வு செய்து அதற்கான மதிப்பீடு குறிப்பிடப்பட்டு அபராதம் விதிக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயமே இறுதி செய்யும் என்றார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...