75 ஆவது சுதந்திர தின விழா - கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை…!

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கோவை மாநகர உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் மோப்பநாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



கோவை: வரும் 15 ஆம் தேதி கொண்டாபடவுள்ள 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 



அதன்படி, கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.



கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் கோவை மாநகர உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் மோப்பநாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட போலீசார் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளையும் சோதனை மேற்கொண்டனர்.



75-ம் சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில், கோவை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளபடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த சோதனையின்போது, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்பது தொடர்பாகவும் மொப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 



அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...